பார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவில்

(லியோ)

மட்டக்களப்பு   பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  பார் வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பாடசாலை மாணவி  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக  பொலிசார் தெரிவித்தனர் .


இன்று வெள்ளிக்கிழமை காலை   மட்டக்களப்பு புன்னைச்சோலை பகுதியில் இருந்து பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவியின் துவிச்சக்கர வண்டியுடன்  பார்  வீதி  பிரதான  புகையிரத நிலைய வீதி  பகுதியில் இருந்து   வந்த  காருடன் மோதியதன்  காரணமாக  இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார்  தெரிவிக்கின்றனர்.

 விபத்தின்  காரணமாக   துவிச்சக்கர வண்டியில்  பயணித்த மட்டக்களப்பு மகாஜன  கல்லூரியில் தரம் 13ல்   கல்வி பயிலும் மாணவி  படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலை  தகவல்கள் தெரிவிகின்றன .

 இந்த  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.