(லியோ)
யுத்தத்தால்
பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை
விருத்தி செய்யும் நோக்குடன் புனர்வாழ்வு அதிகாரசபையினால் சுயதொழில் ஊக்குவிப்பு திட்டங்களை
முன்னெடுத்து வருகின்றன .
இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான
சுயதொழில் ஊக்குவிப்பு பயிற்சிகள் வழங்கும்கருத்தரங்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக விதாதா
வள நிலையத்தில் புனர்வாழ்வு அதிகாரசபை நிறைவேற்று பணிப்பாளர் என் . புவனேந்திரன்
தலைமையில் இன்று இடம்பெற்றது .
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும்
அதனுடன் தொடர்புடைய செயல்களிளினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் வாழ்வாதாரத்தை
விருத்தி செய்வதற்காக புனர்வாழ்வு
அதிகாரசபையினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் மெழுகுதிரி உற்பத்தி சம்பந்தமான
பயிற்சி வழங்கும் கருத்தரங்கில் 20 குடும்ப பெண்கள் கலந்துகொண்டனர்
.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் , மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர்
. நெடுஞ்செழியன் , மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மாவட்ட செயலக
புனர்வாழ்வு அதிகாரசபை உதவியாளர் இ .
தினேஸ்குமார் , மண்முனை வடக்கு விதாதா வள நிலைய விஞ்ஞான தொழில் நுட்ப
உத்தியோகத்தர் திருமதி . என் .வளர்மதி மற்றும்
மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய
செயல்களிளினால் பாதிக்கப்பட்ட குடும்ப பெண்கள் கலந்துகொண்டனர் .