(லியோ)
கல்விசார் கிறிஸ்தவ
ஐக்கியம் - இலங்கையினால் கிறிஸ்தவ மாணவர் மத்தியில் வேதாகம அறிவை வளர்க்கும்
நோக்கில் வருடா வருடம் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது.
இதன்கீழ் மட்டக்களப்பு
மாவட்டம் அம்பறை மாவட்டத்தில் பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்பட்டன
.
கல்விசார் கிறிஸ்தவ
ஐக்கியம் – இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் த.யு.ஆர் போல் தலைமையில் இடம்பெற்ற முதலாவது பரிசளிப்பு
விழாவின் முதலாம் கட்டம்
நிகழ்வு மட்டக்களப்பு மகாஜன கல்லூரி
மண்டபத்தில் இடம்பெற்றது .
இப்பரிசளிபப்பு
விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் ஆசிரியர்களுக்கும்
கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் மாணவர்களில் அதிகூடிய புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு சீயோன் தேவாலய போதகர் ரோஷன் மகேசன் ,மட்டக்களப்பு எங்கிலிகன் திருச்சபை போதகர் திருக்குமார் , ஊறணி கிராமிய வேதாகம ஊழியம்
போதகர் தேவேந்திரன் ,ஐயங்கேணி தேவசபை
போதகர் குலசேகரம் ,மட்டக்களப்பு செல்வேசன்
ஆமி கெப்டன்
தர்சினி , திருப்பெருந்துறை லிவ்விங் கோட்
தேவாலய போதகர் யேசு நேசன் மற்றும் கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் பாடசாலை ஆசிரியர்கள்
, மாணவர்கள் கலந்துகொண்டனர் .