கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

(லியோ)

கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் - இலங்கையினால் கிறிஸ்தவ மாணவர் மத்தியில் வேதாகம அறிவை வளர்க்கும் நோக்கில் வருடா வருடம் பரீட்சை நடாத்தப்பட்டு வருகின்றது.


இதன்கீழ் மட்டக்களப்பு மாவட்டம்  அம்பறை மாவட்டத்தில் பாடசாலைகளில் பரீட்சை நடாத்தப்பட்டன .

கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் – இலங்கையின் முகாமைத்துவப் பணிப்பாளர் த.யு.ஆர்  போல் தலைமையில் இடம்பெற்ற முதலாவது பரிசளிப்பு விழாவின்   முதலாம் கட்டம் நிகழ்வு  மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .

இப்பரிசளிபப்பு விழாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாடசாலை கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் ஆசிரியர்களுக்கும் கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் மாணவர்களில் அதிகூடிய  புள்ளிகள் பெற்றுச் சித்தியடைந்த மாணவர்களுக்கு பதக்கங்களும்  சான்றிதழ்களும்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர் .


இந்நிகழ்வில் மட்டக்களப்பு சீயோன் தேவாலய போதகர் ரோஷன் மகேசன் ,மட்டக்களப்பு எங்கிலிகன்  திருச்சபை போதகர்  திருக்குமார் , ஊறணி கிராமிய வேதாகம ஊழியம் போதகர் தேவேந்திரன் ,ஐயங்கேணி தேவசபை  போதகர்  குலசேகரம் ,மட்டக்களப்பு செல்வேசன் ஆமி கெப்டன் தர்சினி , திருப்பெருந்துறை லிவ்விங் கோட் தேவாலய போதகர் யேசு நேசன் மற்றும் கல்விசார் கிறிஸ்தவ ஐக்கியம் பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்துகொண்டனர் .