(லியோ )
மட்டக்களப்பு கல்லடி
விநாயகர் வித்தியாலய வருடாந்த மெய்வல்லுனர்
விளையாட்டு போட்டி நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது .
இவ் விளையாட்டு போட்டி
நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினர் ஞா . ஸ்ரீநேசன் ,மற்றும் திருமதி . ஸ்ரீநேசன் , சிறப்பு விருந்தினராக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் கே
.பாஸ்கரன், கௌரவ விருந்தினர்களாக மன்முனை வடக்கு கோட்டக்கல்வி
பணிப்பாளர் ஏ .சுகுமார், மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக
உதவிக்கல்வி பணிப்பாளர் (ஆரம்பகல்வி) ஆர். பாஸ்கரன் , விசேட விருந்தினர்களாக கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபை
தலைவர் வி . மோகநாதன் ,
வைத்தியர் டி . கேதீஸன் ,கல்லடி
சாயி கமிட்டி தலைவர் . என் , கனேசானந்தன் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , பாடசாலை ஆசிரியர்கள்
, மாணவர்கள் ,பெற்றோர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை
அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும்
வலயக் கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டது .
இதனை தொடர்ந்து மாணவ தலைவர்களினால் ஒலிம்பிக் சுடர்
ஏற்றப்பட்டு, சத்திய பிரமாண நிகழ்வுடன் மாணவர்களின் அணிவகுப்பு இடம்பெற்றது.
2016 ஆம் ஆண்டு புதிய பாட திட்டத்திற்கு அமைவாக “செயல்பட்டு மகிழ்வோம் “ என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களின் விளையாட்டு நிகழ்வுகளும் , வினோத உடை போட்டி, மற்றும் பழைய மாணவர்கள்
, பெற்றோர்கள் ஆகியோரின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும், வழங்கப்பட்டு
விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.