(லியோ)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழித்தின
போட்டி நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது
.
மட்டக்களப்பு கல்வி வலயதிற்குட்பட்ட
மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ்
மொழித்தின போட்டி நிகழ்வுகள்
கோட்டக் கல்வி அலுவலகம் ஏற்பாட்டில்
கோட்டக்கல்வி பணிப்பாளர். எ . சுகுமாரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு
மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .
இவ்வருடத்துக்கான மண்முனை மண்முனை
வடக்கு கோட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள் அனைத்தும் சுற்று நிருபத்திற்கு
அமைவாக 26 போட்டிகள்
சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம
விருந்தினராக மாஸ்டர் சிவலிங்கம் கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் சிவலிங்கம்
மாஸ்டருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
இதனை தொடர்ந்து கடந்த ஆம்
திகதி இடம்பெற்ற தமிழ்த்தின எழுத்தாக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு
சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . .
இன்று இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர் .கே .பாஸ்கரன்
மற்றும் கோட்டமட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிர்யர்கள் , மாணவர்கள் , ஆகியோர்
கலந்துகொண்டனர்