மண்முனை வடக்கு கல்விக் கோட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழித்தின போட்டி

(லியோ)

மட்டக்களப்பு மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட  பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழித்தின போட்டி  நிகழ்வுகள்  இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு கல்வி வலயதிற்குட்பட்ட  மண்முனை வடக்கு கல்விக் கோட்ட மட்ட பாடசாலைகளுக்கிடையிலான தமிழ் மொழித்தின  போட்டி  நிகழ்வுகள்   கோட்டக் கல்வி அலுவலகம் ஏற்பாட்டில்  கோட்டக்கல்வி பணிப்பாளர். எ . சுகுமாரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரி மண்டபத்தில்  இடம்பெற்றது .

இவ்வருடத்துக்கான  மண்முனை மண்முனை வடக்கு கோட்ட மட்ட தமிழ் மொழித் தினப் போட்டிகள் அனைத்தும் சுற்று நிருபத்திற்கு அமைவாக  26 போட்டிகள் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு இடம்பெற்றது . 
இந்நிகழ்வில்  பிரதம விருந்தினராக  மாஸ்டர் சிவலிங்கம்  கலந்துகொண்டதுடன் இந்நிகழ்வில் சிவலிங்கம் மாஸ்டருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
இதனை தொடர்ந்து  கடந்த ஆம் திகதி இடம்பெற்ற தமிழ்த்தின எழுத்தாக்கல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . .
இன்று இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்விப்பணிப்பாளர்  .கே .பாஸ்கரன்  மற்றும் கோட்டமட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிர்யர்கள் , மாணவர்கள் , ஆகியோர் கலந்துகொண்டனர்