(லியோ)
மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர்
பாடசாலை மாணவர்களின் இல்ல விளையாட்டுப் போட்டி இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு அமிர்தகழி கருணை பாலர்
பாடசாலையின் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்வுகள்
அதிபர் திருமதி .பிரதீபா தர்ஷன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இன்று
இடம்பெற்றது .
விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு
வலயக் கல்விப் முன்பள்ளி உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் .
புவிராஜா ,கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு
மரியாள் பேராலய உதவி பங்குதந்தை நிக்கலஸ் ஜுட் அருளானந்தம் , விசேட அதிதிகளாக
மாவட்ட செயலக சிறுவர் மேம்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் வி . குகதாசன் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக
சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர் டி .மேகராஜ்
,அமிர்தகழி கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி . எஸ் . . தர்ஷினி ,,. பாலமீன்மடு
பொலிஸ் பொறுப்பதிகாரி டி .எ . எஸ் . கே . தம்பகல ஆகியோருடன் பாடசாலை மாணவர்கள்
மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர் .
ஆரம்ப
நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து
வரப்பட்டனர்,
இதனை தொடர்ந்து மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வுடன்
விளையாட்டுகள் ஆரம்பமானது,
விளையாட்டு
நிகழ்வுகளில் மாணவர்களின் வினோத விளையாட்டு போட்டிகள் வினோத உடை போட்டி, மற்றும், பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத
விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
விளையாட்டு
போட்டியின் இறுதி நிகழ்வாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டு விளையாட்டு
நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.