(என்டன்)
இருதயபுரம் கிழக்கு மாநகர் பாலர் பாடசாலை முன்பள்ளி சிறார்களின் ஓவியம் வரைதல் ஊக்குவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது.
.மட்டக்களப்பு கல்வி
வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு இருதயபுரம் கிழக்கு மாநகர் பாலர் பாடசாலை
முன்பள்ளி சிறார்களின் “சுதந்திரத்தின் எல்லை வானம்” ஓவியம் வரைதல் ஊக்குவிப்பு நிகழ்வு இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலகமும் ,கலாசார மற்றும் கலை அலுவல்கள் திணைக்களமும் இணைந்து
நடாத்தும் “பன்னிரெண்டு மாத விளக்கு” எனும் தொனிப்பொருளில் “சுதந்திரத்தின் எல்லை வானம்” முன்பள்ளி
சிறுவர்களுக்கான ஓவியம் வரைதல் ஊக்குவிப்பு நிகழ்வு இன்று மட்டக்களப்பு இருதயபுரம்
மாநகர் பாடசாலையில் அதிபர் திருமதி .சிவகுமார் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம
அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா கலந்துகொண்டு சிறுவர்களின் ஓவியம்
வரைதல் நிகழ்வினை ஆரம்பித்து வைத்தார் .
இன்று இடம்பெற்ற “சுதந்திரத்தின் எல்லை வானம்”
முன்பள்ளி சிறுவர்களுக்கான ஓவியம் வரைதல் ஊக்குவிப்பு திட்ட நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களான எச் . டியுனிசியா , மொறின் தவராஜா , மண்முனை வடக்கு கலாசார
அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.