மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம் திறந்து வைக்கப்பட்டது

(லியோன்)

நவீன வசதிகளுடன்  கூடிய கேட்போர் கூடம் இன்று மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்தில் நவீன வசதிகளுடன் கொண்ட புதிய கேட்போர் கூடம் மட்டக்களப்பு பிரதம தபாலதிபர் எம் . ஜெயரெட்ணம்  தலைமையில் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி  வி  . விவேகானந்தலிங்கம் இன்று  திறந்து வைத்தார்  .  

இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதம போதனாசிரியர் பி . நரேந்திரன் , மட்டக்களப்பு பிரதம நிர்வாக உத்தியோகத்தர் சி . அருட்செல்வம் , மட்டக்களப்பு பிராந்திய கணக்காளர் . ச . ஜெயந்திரா  மட்டக்களப்பு பிரதேச அஞ்சல்  அத்தியட்சகர் எஸ் . ஜெகன் , திருகோணமலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் . அனுர ரத்நாயக , அம்பாறை – அக்கரைப்பற்று  பிரதம அஞ்சல் அத்தியட்சகர் எம் . தம்பி ஐயா மட்டக்களப்பு அலுவலக பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எ .சுகுமாரன் மற்றும் அஞ்சல் அலுவாக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .


இன்று இடம்பெற்ற நிகழ்வின் போது மட்டக்களப்பு  அஞ்சல் அலுவலக உத்தியோகத்தர்களினால் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .