(லியோன்)
நவீன வசதிகளுடன் கூடிய கேட்போர் கூடம் இன்று மட்டக்களப்பு பிரதம
அஞ்சல் அலுவலகத்தில் திறந்து வைக்கப்பட்டது .
மட்டக்களப்பு பிரதம அஞ்சல் அலுவலகத்தில் நவீன
வசதிகளுடன் கொண்ட புதிய கேட்போர் கூடம் மட்டக்களப்பு பிரதம தபாலதிபர் எம் .
ஜெயரெட்ணம் தலைமையில் கிழக்கு மாகாண பிரதி
அஞ்சல் மா அதிபதி வி . விவேகானந்தலிங்கம் இன்று திறந்து வைத்தார் .
இந்நிகழ்வில்
மட்டக்களப்பு பிரதம போதனாசிரியர் பி . நரேந்திரன் , மட்டக்களப்பு பிரதம நிர்வாக
உத்தியோகத்தர் சி . அருட்செல்வம் , மட்டக்களப்பு பிராந்திய கணக்காளர் . ச .
ஜெயந்திரா மட்டக்களப்பு பிரதேச
அஞ்சல் அத்தியட்சகர் எஸ் . ஜெகன் ,
திருகோணமலை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் . அனுர ரத்நாயக , அம்பாறை –
அக்கரைப்பற்று பிரதம அஞ்சல் அத்தியட்சகர்
எம் . தம்பி ஐயா மட்டக்களப்பு அலுவலக பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் எ .சுகுமாரன்
மற்றும் அஞ்சல் அலுவாக உத்தியோகத்தர்கள் ,ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
இன்று இடம்பெற்ற
நிகழ்வின் போது மட்டக்களப்பு அஞ்சல்
அலுவலக உத்தியோகத்தர்களினால் கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதிக்கு பொன்னாடை
போர்த்தி கௌரவிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .