மண்முனை வடக்கு பிரதேச செயலக சுதந்திர தின நிகழ்வு

(லியோன்)

இலங்கையின் 68 வது தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது .



மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன .


மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச   செயலகத்தில் 68வது சுதந்திர தின நிகழ்வுகள்  பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில்  பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது .


இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன் , பிரதேச செயலக வளாக தோட்டத்தில்  ஆயிர்வேத மூலிகை செடிகள் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றது .



இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா உட்பட பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.