(லியோன்)
இலங்கையின்
68 வது தேசிய சுதந்திர
தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது .
மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று காலை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன .
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் 68வது சுதந்திர தின நிகழ்வுகள் பிரதேச செயலாளர் வி .தவராஜா தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது .
இதனை
தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தை துப்பரவு செய்யும் சிரமதான பணிகள் இடம்பெற்றதுடன்
, பிரதேச செயலக வளாக தோட்டத்தில் ஆயிர்வேத
மூலிகை செடிகள் நாட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா உட்பட பிரதேச
செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.