மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் 68வது சுதந்திர தின நிகழ்வுகள்

68வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள அலுவலகங்கள் திணைக்களங்களில் தேசிய கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களின் பிரதான நிகழ்வு மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் யு.வி.ஜயசிங்க தலைமையில் தேசிய கொடியேற்றப்பட்டு தேசிய தின நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சர் டி.ரத்னாயக்க உட்பட பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.