(என்டன் )
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாமரைக்கேணி பகுதியில் உள்ள
தனியார் கல்வி நிலையத்தில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில் மாணவர்களும் அருகில் உள்ள நிலையத்தில் கல்வி
பயின்றுகொண்டு இருந்துள்ளமையினால் இப்பகுதியில்
சிறிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
கல்வி நிலையத்தின் ஆசிரியரின் ஆவணங்கள் வைக்கும் நிலைய பகுதியே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது . ஏற்பட்ட
தீயினை ஆசிரியரும் , மாணவர்களும் இணைந்து தீயினை அனைத்து கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவந்துள்ளனர் .
தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் இங்கு
வைக்கப்பட்டிருந்த ஆவணங்ககள் மற்றும் பொருட்களும் எரிந்து சேதமடைந்துள்ளது .
சம்பவம் தொடர்பாக ஆசிரியரிடம் கேட்டபோது ஆசிரியறினால் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டதாகவும் இந்த விளக்கு திரியினை எலியினால்
கொண்டு செல்லப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களில்
மேல் போடபட்டிருக்கலாம் இதனாலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது என கல்விநிலைய
ஆசிரியர் தெரிவித்தார் .
இடம்பெற்ற தீ விபத்தினால் ஆசிரியருக்கோ , மாணவர்களுக்கோ எதுவித பிரச்சினைகளும்
இடம்பெறவில்லை என கல்வி நிலைய ஆசிரியர்
தெரிவித்தார் .