எலி செய்த வேலையினால் ஆசிரியரின் ஆவணங்கள் தீக்கிரை

(என்டன் )


மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தாமரைக்கேணி  பகுதியில் உள்ள   தனியார்  கல்வி நிலையத்தில் தீ விபத்து  இடம்பெற்றுள்ளது .


இந்த சம்பவம் இடம்பெற்ற வேளையில்  மாணவர்களும் அருகில் உள்ள நிலையத்தில் கல்வி பயின்றுகொண்டு இருந்துள்ளமையினால்  இப்பகுதியில் சிறிய பரபரப்பு  ஏற்பட்டுள்ளது .  

கல்வி நிலையத்தின் ஆசிரியரின் ஆவணங்கள் வைக்கும்  நிலைய பகுதியே இவ்வாறு தீக்கிரையாகியுள்ளது . ஏற்பட்ட தீயினை ஆசிரியரும் , மாணவர்களும் இணைந்து தீயினை அனைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் .

தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் இங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்ககள் மற்றும் பொருட்களும்  எரிந்து சேதமடைந்துள்ளது .

சம்பவம் தொடர்பாக ஆசிரியரிடம் கேட்டபோது ஆசிரியறினால் விளக்கு ஏற்றி  வைக்கப்பட்டதாகவும்  இந்த விளக்கு திரியினை  எலியினால்  கொண்டு செல்லப்பட்டு இங்கு வைக்கப்பட்டிருந்த ஆவணங்களில் மேல் போடபட்டிருக்கலாம் இதனாலே இந்த தீ விபத்து இடம்பெற்றுள்ளது என கல்விநிலைய ஆசிரியர் தெரிவித்தார் .


 இடம்பெற்ற தீ விபத்தினால் ஆசிரியருக்கோ , மாணவர்களுக்கோ எதுவித பிரச்சினைகளும் இடம்பெறவில்லை என  கல்வி நிலைய ஆசிரியர் தெரிவித்தார் .