ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள்

(என்டன் )


 மட்டு - ஊறணி சரஸ்வதி  வித்தியாலயத்தின்   2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  ஊறணி சரஸ்வதி  வித்தியாலயத்தின்   2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பிற்பகல்  02.00  மணியளவில் பாடசாலை மைதானத்தில் அதிபர்  எம் . யோகானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது .

விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு முதன்மை  விருந்தினராக கிழக்கு மாகாணசபை உறுப்பினர்  கே .கருணாகரன் , கௌரவ விருந்தினர்களாக மட்டக்களப்பு வலயக் கல்விப்பணிப்பாளர் கே .பாஸ்கரன் ,  மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ . சுகுமாரன்  மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக  பி எஸ் ஐ இணைப்பாளர்  பெனடிக் அன்டனி மற்றும் இந்நிகழ்வில்  பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , கிராம அபிவிருத்தி மாதர் சங்க உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள்,  பாடசாலை பழைய மாணவர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர்,

அதனை தொடர்ந்து  தேசிய கொடிபாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன்  மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.

விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டுமாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .

விளையாட்டு நிகழ்வுகளில் மாணவர்களின் ஓட்டப்போட்டி ,நிகழ்வுகள்  மாணவர்களின் உடற்பயிற்சி , வினோத உடை போட்டிமற்றும் பழைய மாணவிகள்பெற்றோர்கள்,ஆசிரியர்கள் ஆகியோரின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,

பாடசாலையின் 2016ஆம் ஆண்டு இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நிகழ்வாக  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும்சான்றிதழ்களும்வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.