காத்தான்குடி பகுதியில் கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் கைது

(என்டன் )

மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில்  கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள்  கைதுசெய்யப்பட்டுள்ளதாக  காத்தான்குடி பொலிசார் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு  காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த நான்கு மாத காலப்பகுதியில்  ஒன்பது வீடுகளை உடைத்து  கொள்ளையிடப்பட்ட கையடக்க தொலைபேசிகள்  மற்றும் 35 பவுன் பெறுமதியான நகைகள், கொள்ளையிடப்பட்ட பணத்தில்  வாங்கிய மோட்டார் சைக்கள்  ஆகியன காத்தான்குடி பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர் .

  மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் பிரிவு  SP. உபாலி ஜயசிங்க ,,ASP-01  SP . ரத்நாயக , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி . வெலகெதர     ஆகியோரின் வழிகாட்டலுக்கு அமைவாக காத்தான்குடி குற்றவியல் பொலிசாருடன்  சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதல்  நடவடிக்கையின் போது   20 , 21 ,24 வயதுடைய
மூன்று இளைஞர்கள்   நேற்று இரவு காத்தான்குடி பகுதியில் உள்ள வைத்து  கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர் . 


கைதுசெய்யப்பட்ட மூவரும்  மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தியதை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக  காத்தான்குடி . பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி . வெலகெதர   தெரிவித்தார் .