(லியோ )
மட்டக்களப்பு மறை
மாவட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூக அங்கத்தவர்களின் அர்ப்பண வாக்குறுதிகளை நிறைவேற்றும் நிகழ்வு இன்று
இடம்பெற்றது.
மட்டக்களப்பு ,கல்முனை , அக்கரைப்பற்று மறைக்கோட்ட கிறிஸ்தவ
வாழ்வு சமூக அங்கத்தவர்கள்
அர்ப்பணம் செய்தலும், அர்ப்பணம் செய்தவர்கள் தங்களது அர்ப்பண வாக்குறுதிகளை புதிப்பித்தலுமான
அர்ப்பண நிகழ்வு ஆன்மீக அருட்பணி போல்
சற்குணநாயகம் தலைமையில் மட்டக்களப்பு சின்ன உப்போடை புனித திரேசா கன்னியர் இல்ல
ஆலயத்தில் விசேட திருப்பலியுடன் இன்று
இடம்பெற்றது .
கிறிஸ்தவ வாழ்வு சமூகம்
உறுப்பினர்கள் தங்களது அர்ப்பணம் வாழ்வில்
இறைவனுடன் ஒன்றித்து கிறிஸ்துவின் வழியில் செல்ல தன்னை எவ்வாறு ஆயத்தப்படுத்த
வேண்டும் என்பதனை இன்று இடம்பெற்ற அர்ப்பண வாக்குறுதிகளை புதுபித்தல் மற்றும் அர்ப்பணம் செய்தல்
தொடர்பான விசேட நிகழ்வில் குழுக்களாக பிரிக்கப்பட்டு குழுக்களுக்கிடையில் ஆன்மீக கலந்துரையாடல்களும் தொடர்ந்து விசேட மறை உரையுடனான , திருப்பலியும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் அருட்தந்தையர்கள்
, அருட்சகோதரிகள் மற்றும் மட்டக்களப்பு ,கல்முனை .அக்கரைப்பற்று ஆகிய மறைக்கோட்ட கிறிஸ்தவ வாழ்வு சமூக அங்கத்தவர்கள்
கலந்துகொண்டனர் .