(லியோ )
மட்டக்களப்பு மாவட்ட சிவில் மற்றும் அரச சார்பற்ற நிருவனங்ககளின் சிபாரிசுகள் பற்றிய மூன்றாவது கலந்துரையாடல் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .
அரசியல் யாப்பு மறுசீரமைப்பு தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்கள்
இணையத்துடன் இணைந்து கடந்த சில நாட்களாக செயல்படுத்தப்பட்ட
மக்களின் கருத்து கணிப்பு தொடர்பான இறுதி
கலந்துரையாடல் எகெட் கரித்தாஸ் நிறுவன அனுசரணையில் மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் இன்று
இடம்பெற்றது .
தற்போது
பேசப்படுகின்ற புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் சம்பந்தனான மட்டக்களப்பு மாவட்ட சிவில் மற்றும் அரச
சார்பற்ற நிருவனங்ககளின் சிபாரிசுகள் பற்றிய மூன்றாவது கலந்துரையாடல் இன்று இடம்பெற்ற நிகழ்வில் சுமார் 80 அரச சார்பற்ற பிரதிநிதிகள் பங்கு பற்றி உள்ளீடுகள் வழங்கப்பட்டன
.
இந்நிகழ்வில் பெபரெல்
அமைப்பை சேர்ந்த எம் . ரிசாட் , எப் .
ஸ்டான்லி ஆகியோர் வளவாலர்களாக கலந்துகொண்டனர் .
அரசாங்கத்தினால் ஏற்கனவே வெளியிடப்பட்ட 20 ஆலோசனைகளை முன்வைத்து இன்றைய கலந்துரையாடல்கள் மற்றும்
குழு வேலைகள் இடம்பெற்றன . இதில் முக்கிய விடயங்களான
1 அடிப்படை உரிமைகள் ,2 ஆட்சி முறை ,3 நீதித்துறை, 4 தேர்தல் முறைமை .5 அதிகார
பகிர்வு, 6
இனம், மதம் , மொழி போன்றவை பேசப்பட்டன .
இன்று
கலந்துரையாடப்பட்ட தொகுப்புகள் எதிர் வரும் 25 ஆம் 26ஆம் திகதிகளில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள யாப்பு சீர்திருத்த குழு
கூட்டத்தில் சமர்பிக்கப்படவுள்ளன .
இன்று இடம்பெற்ற
நிகழ்வு மட்டக்களப்பு எகெட் கரிதாஸ் நிறுவன இணைப்பாளர் அருட்பணி ஜெரோம் டிலிமா
தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற பிரதிநிகளும்
, கொழும்பு பெபரல் அமைப்பு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர் .