கொக்கட்டிச்சோலையில் மோட்டார் சைக்கிள் எரிப்பு

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை நகரில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று இனந்தெரியாதவர்களினால் தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.


நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 11.30மணியளவில் நகரில் உள்ள வீட்டின் முன்பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.