(லியோ )
மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயம் தன்னாமுனை 2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயம் தன்னாமுனை 2016 ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் இன்று பாடசாலை மைதானத்தில் அதிபர் டி .ராஜமோகன் .தலைமையில் இடம்பெற்றது .
விளையாட்டு போட்டி நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் கே .பாஸ்கரன் , விசேட விருந்தினர்களாக ஏறாவூர் பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் .பாலசுப்பிரமணியம் மற்றும் சிறப்பு அதிதியாகஉதவிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி) வி
.லவக்குமார் மற்றும் இந்நிகழ்வில் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ,பாடசாலை ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆரம்ப நிகழ்வாக பாடசாலை மாணவர்களால் அதிதிகளுக்கு மலர் மாலை அணிவித்து சிறுவர்களினால் நடனமாடி
அழைத்து வரப்பட்டனர்,
அதனை தொடர்ந்து தேசிய கொடி, பாடசாலை கொடி மற்றும் இல்லக்கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் மாணவர்களின் இல்ல அணிவகுப்பு இடம்பெற்றது.
விளையாட்டு நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக இல்ல மாணவ தலைவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, மாணவ தலைவர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இடம்பெற்றது .
இதனை
தொடர்ந்து அதிதிகளினால் பெலூன்கள்
பறக்கவிடப்பட்டு இல்ல மாணவர்களின்
அணிநடை நிகழ்வுகளுடன் விளையாட்டு
நிகழ்வுகள்
விளையாட்டு நிகழ்வுகளில் சிறுவர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும்
பாடசாலை மாணவர்கள் , பாடசாலை பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றது,
இறுதி நிகழ்வாக 2016ஆம் ஆண்டுக்கான கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டியில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும், சான்றிதழ்களும்,வெற்றி கிண்ணங்களும்
வழங்கப்பட்டு விளையாட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நிறைவு பெற்றது.