மட்டக்களப்பு மாணவி துஸ்பிரயோக வழக்கு 19ஆம் திகதி ஒத்திவைப்பு

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை இடமாற்றம் செய்யுமாறு மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பு புறநகர் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டதாக கூறி கடந்த மாதம் 26ஆம் திகதி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குறித்த பாடசாலையின் ஆசிரியர் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் 08ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

எனினும் கடந்த இரண்டாம் திகதி 08ஆம் ஆசிரியரின் உறவினர்களினால் பிணை அனுமதி விடுக்கப்பட்டு இரண்டு சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் இதன் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டபோது துஸ்பிரயோகத்திற்குள்ளானதாக தெரிவிக்கப்படும் மாணவியின் சட்ட வைத்திய பரிசோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஆராய்ந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிபதியும் நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதியுமான எம்.பி.முகைதீன் வழக்கினை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதுடன் குறித்த ஆசிரியரை வேறு வலயத்திற்கு இடமாற்றுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.