(என்டன் )
2016
ஆம் வருடத்திற்கான சாரணர்களின் ஜம்போரி கில்வெல் ஒன்று கூடல் நிகழ்வு இம்முறை
யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ளது .
இலங்கையின் 09 வது தேசிய சாரணர் ஜம்போரி கில்வெல் ஒன்றுகூடல்
நிகழ்வு எதிர் வரும் 21ஆம் திகதி யாழ்பாணம் மத்திய
வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது .
இந்நிகழ்வினை பிரதிநிதித்துவப்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 360 சாரணர்களும் 40 சாரண ஆசிரியர்களும் கலந்துகொள்ளவுள்ளனர் .
இந்நிகழ்வு தொடர்பாக மட்டக்களப்பு
மாவட்ட சாரணர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வு
இன்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் மாவட்ட சாரணர் ஆணையாளர் இ ,பி . ஆனந்தராஜா
தலைமையில் இடம்பெற்றது .
நடைபெறவுள்ள 09 வது தேசிய சாரணர்கள் ஜம்போரியில் சாரணர்களின்
செயல்பாடுகள் தொடர்பான தெளிவூட்டல்களும் ஜம்போரி கில்வெல் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ளவுள்ள மட்டக்களப்பு மாவட்ட சாரனர்களுக்கான சின்னங்களும் , அடையாள அட்டைகள் வழங்கும் நிகழ்வும் இன்று
இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
மாவட்ட சாரணியர் உதவி ஆணையாளர்
எ . குணரெட்னம் , சாரணர் உதவி ஆணையாளர் . வி .பிரதீபன் , மாவட்ட சாரணர்
நிகழ்ச்சி உதவி ஆணையாளர் . ஐ .கிறிஸ்டி , மாவட்ட சாரணர் ஊடக உதவி ஆணையாளர் எ . உதய
குமார் , மாவட்ட சாரணர் பயிற்சி ஆணையாளர்
மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சாரணர்களும் கலந்துகொண்டனர் .