இலவச கல்வியை பாதுகாக்ககோரியும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை மூடக்கோரியும் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீட மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்ட பேரணியை நடாத்தினர்.
மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீடத்தில் இருந்து கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு காந்திபூங்காவரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
வைத்தியபீடத்தின் மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மருத்துவபீடத்தின் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மாலெபயில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை மூடவும் இலவச கல்வியை பாதுகாக்குமாறும் இதன்போது கோசங்களை எழுப்பினர்.
இலவச கல்வியையும் இலவச வைத்திய சேவையினையும் அழிக்கும் கல்விக்கடையினை மூடு,மாலபே என்னும் மருத்துவபட்டம் விற்கும் கடையை மூடு,பல்கலைக்கழக அனுமதியை கூட்டுவோம்,போன்ற சுகோலங்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்ட பேரணியல் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.
மட்டக்களப்பு அரசடி சௌக்கிய பராமரிப்பு மருத்துவபீடத்தில் இருந்து கோசங்களை எழுப்பியவாறு மட்டக்களப்பு காந்திபூங்காவரை இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது.
வைத்தியபீடத்தின் மாணவர்கள் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் மருத்துவபீடத்தின் மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
மாலெபயில் உள்ள தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தினை மூடவும் இலவச கல்வியை பாதுகாக்குமாறும் இதன்போது கோசங்களை எழுப்பினர்.
இலவச கல்வியையும் இலவச வைத்திய சேவையினையும் அழிக்கும் கல்விக்கடையினை மூடு,மாலபே என்னும் மருத்துவபட்டம் விற்கும் கடையை மூடு,பல்கலைக்கழக அனுமதியை கூட்டுவோம்,போன்ற சுகோலங்கள் பொறிக்கப்பட்ட வாசகங்களையும் ஆர்ப்பாட்ட பேரணியல் கலந்துகொண்டோர் ஏந்தியிருந்தனர்.