(லியோன் )
ஆரோக்கியமான நாட்டையும் ,நாட்டு மக்களையும் உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு அமைவாக தேசிய ரீதியில் 25 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை உடல்பயிற்சி வாரமாக அனுஸ்டிக்கப்படுகின்றது .
இதனை முன்னிட்டு மட்டக்களப்பு
போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் மற்றும்
தாதிய உத்தியோகத்தர்களின் “உற்சாகமான வாழ்க்கையின் மூலம் அனைவருக்கும் சுகம் , மகிழ்சி மற்றும் ஆனந்தம் “எனும் தலைப்பில் உடல்பயிற்சி நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது .
இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் இப்ரா லெப்பை தலைமையில் மட்டக்களப்பு
வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது .
இந்த உடல்பயிற்சி நிகழ்வில் போதனா வைத்தியசாலை வைத்திய
அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.