“உற்சாகமான வாழ்க்கையில் அனைவருக்கும் சுகம் “ வைத்திய அதிகாரிகளின் உடல்பயிற்சி நிகழ்வு

(லியோன் )

ஆரோக்கியமான நாட்டையும் ,நாட்டு மக்களையும்  உருவாக்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனைக்கு  அமைவாக தேசிய  ரீதியில் 25 ஆம் திகதி  தொடக்கம்   30  ஆம் திகதி வரை  உடல்பயிற்சி வாரமாக  அனுஸ்டிக்கப்படுகின்றது .

இதனை முன்னிட்டு   மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  வைத்திய அதிகாரிகள் மற்றும் தாதிய உத்தியோகத்தர்களின் “உற்சாகமான வாழ்க்கையின் மூலம்  அனைவருக்கும் சுகம் , மகிழ்சி மற்றும் ஆனந்தம் “எனும் தலைப்பில் உடல்பயிற்சி நிகழ்வுகள் இன்று காலை இடம்பெற்றது  .

இந்நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை  பணிப்பாளர் வைத்தியர் இப்ரா லெப்பை தலைமையில் மட்டக்களப்பு வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது . 

இந்த உடல்பயிற்சி நிகழ்வில்  போதனா வைத்தியசாலை  வைத்திய அதிகாரிகள் , தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை  ஊழியர்கள் ஆகியோர்  கலந்துகொண்டனர்.