ஜனாதிபதியின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதியின் ஓராண்டு பதவியேற்பினை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன.

மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாடுசெய்த நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கோட்டைப்பூங்கா பகுதியில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின்போது 21 மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன்,கணக்காளர் ஜோர்ஜ்பிள்ளை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் பதவியேற்பு ஆண்டு நிறைவினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் அருகிவரும் மரங்கள் தெரிவுசெய்யப்பட்டு நடப்பட்டதாக மாநகர ஆணையாளர் தெரிவித்தார்.