(லியோன்)
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த
நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியை
முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன .
இதன் ஒரு நிகழ்வு
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்
இடம்பெற்றது.
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில்
பிரதேச செயலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை
வழிபாடுகள் இடம்பெற்றதுதன் தொடர்ந்து செயலக வளாகத்தில் தேசிய மரநடுகை நிகழ்வு
இடம்பெற்றது .
இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ் . யோகராஜா . பிரதேச செயலக உதவி திட்டமிடல்
பணிப்பாளர் ஆர் .யதிஸ்குமார், பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஆர் .ஜெகநாதன்
மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தைகள் ஆகியோர்
கலந்துகொண்டனர் .