ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள்


(லியோன்)


கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி இந்த நாட்டின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்டு ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு விசேட நிகழ்வுகள் இன்று இடம்பெற்றன .


இதன் ஒரு நிகழ்வு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறப்பு நிகழ்வுகள் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராசா தலைமையில் பிரதேச செயலகத்தில் தேசிய கொடியேற்றப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றது .

இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்திலுள்ள ஆலயத்தில் சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுதன் தொடர்ந்து  செயலக வளாகத்தில் தேசிய மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எஸ் . யோகராஜா . பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர் .யதிஸ்குமார், பிரதேச செயலக கணக்காளர் திருமதி ஆர் .ஜெகநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தைகள் ஆகியோர் கலந்துகொண்டனர் .