ஆசிரிய இடமாற்றங்களை குழப்பாமல் ஆதரவளிக்குமாறு கல்குடா வலய பணிப்பாளர் வேண்டுகோள்

(அனா)
வாகரை பிரதேச மக்களின் நலன் கருதியும் பல வருடங்கலாக அப்பகுதிகளில் கஷ்டப்படும் ஆசிரியர்களின் நலன் கருதியும் செய்யப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களை குழப்பாமல் அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என்கிறார் கல்குடா வலய கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீகிருஸ்னராஜா.


கல்குடா வலய கல்வி அலுவல பிரிவில் செய்யப்பட்ட ஆசியிரியர் இடமாற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினை தொடர்பாக ஊடகங்களுக்கு இன்று (11.01.2016) விடுத்துள்ள அறிக்கையிலயே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது.

ஆசிரியர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் சுமார் 07 தொடக்கம் 08 வருடங்களாக கஸ்டத்தில் கடமைபுரியும் வெளி வலய ஆசியிரியர்களின் நலன் கருதியும் என்னாள் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றங்களைக் குழப்பாமல் ஆதரவு வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் அமைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களைக் கோறியுள்ளார்.

கல்குடா கல்வி வலயத்தில் 28532 மாணவர்கள் கல்வி கற்கின்றனர் 1711 ஆசிரியர்கள் தேவையான போதும் 1383 ஆசிரியர்களே உள்ளனர் 329 ஆசியிர்கள் பற்றாக்குறையாகவுள்ளது இதிலும் 50 வயதிற்கு மேற்பட்டோர் 31 பெர் உள்ளனர் நாளாந்தம் 100 கிலோ மீற்றருக்கு மேல் பயணம் மேற்கொள்ளும் ஆசிரியர்கள் 65 பேர் உள்ளனர் குறிப்பாக 1383 ஆசிரியர்களின் 411 ஆண் ஆசிரியர்கள் உள்ளனர்.

இந்ந நிலையில் வாகரை பிரதேசத்தில் உள்ள ஆசிரியர்கள் பல வருடங்கலாக விரக்தியுற்றுள்ளனர் ஆனால் ஏறாவூர் பற்று மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களில் அப் பிரதேசங்களைச் சார்ந்த 50 வயதிற்குற்பட்ட ஆசிரியர்கள் இதுவரையில் கஷ்டப்பிரதேச சேவை செய்யாத நிலை உள்ளது இவ்வாறு 80 ஆசிரியர்கள் உள்ளனர் இவர்களில் 42 பேருக்கு மட்டுமே வாகரை பிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

எனவே இவ் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பாக அரசியல் ரீதியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன எனவே வலயத்தின் உண்மை நிலையை மேலான கவனத்தில் எடுத்து குறிப்பாக வாகரை பிரதேச கல்வி அபிவிருத்தியையும் பல வருடங்கலாக கஸ்டப்பட்ட ஆசிரியர்களின் மன நிலையையும் கருதி இவ் ஆசிரியர் இடமாற்றங்களில் தலையீடு செய்ய வேண்டாம் என அனைத்து தரப்பினரையும் வேண்டுவதாக அவ் அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.