ஜனாதிபதி பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் சிரமதானம்

(அனா)

நாட்டில் நல்லாட்சி நிலவியதை முன்னிட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் நாட்டில் அனைத்து பிரதேசங்களிலும் நேற்று(08.01.2016) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன் அடிப்படையில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் மையவாடி துப்பரவு செய்யும் நிகழ்வு நேற்று (08.01.2016) பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பிரதேச பொது மக்களும் கலந்து கொண்டனர்.