ஐந்துவருடத்துக்கு பின் பெரியகல்லாறு மாணவி மருத்துவ பீடத்துக்கு தெரிவு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பெரியகல்லாறு மத்திய கல்லூரியில் இருந்து ஐந்து வருடங்களுக்கு பின்னர் மாணவி ஒருவர் மருத்துவபீடத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

பெரியகல்லாறு காளிகோவில் வீதியை சேர்ந்த கோகுலராஜன் சீர்டினி என்னும் மாணவி இரண்டு ஏ சித்திகளையும் ஒரு பீ சித்தியையும் பெற்று மாவட்டத்தில் 30வது இடத்தினையும் பெற்றுள்ளார்.