வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி பதவியேற்பு ஓராண்டு நிறைவுநாள் நிகழ்வு

நாட்டில் நல்லாட்சி நிலவியதை முன்னிட்டும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவி ஏற்று முதலாது ஆண்டு நிறைவை முன்னிட்டும் நாட்டில் அனைத்து பிரதேசஙகளிலும் நேற்று(08.01.2016) பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன் அடிப்படையில் கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த மத வழிபாடும் மர நடுகை நிகழ்வும் பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் இடம் பெற்றது.

நாட்டின் அரசாங்கத்திற்கும் நாட்டு மக்களுக்கும் நல்லாசி வேண்டி வாழைச்சேனை கைலாய பிள்ளையார் ஆலயத்தில் விஷேட ஆராதனை இடம் பெற்றதுடன் பலன் தரக்கூடிய மரக்கன்றுகளும் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பொது இடங்களில் நாட்டப்பட்டது.