(லியோன் )
புதிய அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களின் கீழ்
உரிய அமைச்சின் ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என பாராளுமன்ற
உறுப்பினர் தெரிவித்துக்கொண்டார்.
மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட
காந்திகிராமம் , சின்னஊறணி , பாரதி கிராமம் ,நாவக்கேணி ஆகிய கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்
. வியாலேந்திரன் இன்று இக்கிராம பகுதி
மக்களை சந்திக்க விஜயத்தினை மேற்கொண்டார்
.
இந்த விஜயத்தின் போது இக்கிராம மக்கள் தாம் எதிர் நோக்குகின்ற அடிப்படை பிரச்சினைகளான சுகாதார , நீர் , வீதி கட்டமைப்பு , வடிகான்கள்
,இருப்பிட வசதி ( வீடு ) வாழ்வாதாரம் போன்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினருக்கு முன்வைத்தனர் .
இவைகளை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்
எஸ் .வியாலேந்திரன் கருத்து தெரிவிக்கையில்
இந்த கிராம பகுதியில் சுமார் 400 மேற்பட்ட குடும்பங்கள் பல வருட காலமாக எதுவித
அடிப்படை வசதிகள் இன்றி பின்தங்கிய நிலையில் வசித்து வருகின்றனர் .
இன்று இக்கிராம மக்கள் முன்வைத்த இந்த அடிப்படை கோரிக்கைகளை
உரிய அமைச்சின் கவனத்திற்கு கொண்டு சென்று இதற்கான உரிய தீர்வினை எதிர்கால
வேலைத்திட்டங்களின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துகொண்டார் .