மாணவியை துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியதாக சந்தேகிக்கப்படும் ஆசிரியருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவி ஒருவர் துஸ்பிரயோகம் செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியரை 08ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நிதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராசா உத்திரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவர் துஸ்பிரயோகப்படுத்தப்பட்டதாக கோரி பொதுமக்கள் நேற்று பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவந்த நிலையில் நேற்று ஆசிரியர் கைதுசெய்யப்பட்டிருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த ஆசிரியர் இன்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 08ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.