வீடு இடிப்பதில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்தியேலே பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தொழிலாளர் நால்வர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இவ்வேளையில் தொழிலாளியான ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த எஸ். சேகர் (வயது 52) என்பவர் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது.
அதனால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் தற்சமயம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
ஏறாவூர் காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் ஞாயிற்றுக்கிழமை காலையில் தொழிலாளர் நால்வர் ஈடுபட்டிருந்துள்ளனர்.
இவ்வேளையில் தொழிலாளியான ஏறாவூர் ஐயங்கேணியைச் சேர்ந்த எஸ். சேகர் (வயது 52) என்பவர் மீது சுவர் சரிந்து விழுந்துள்ளது.
அதனால் பாரதூரமாகப் பாதிக்கப்பட்ட அவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.
சடலம் தற்சமயம் பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.