(லியோன்)
மட்டக்களப்பு நாவற்கேணி மென்கெப் விசேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலையின்
பத்தாவது ஆண்டு தின நிகழ்வுகள் இன்று
நாவற்கேணி மென்கெப் பாடசாலையில் இடம்பெற்றது .
நாவற்கேணி மென்கெப் விசேட தேவையுடைய மாணவர்களின் பாடசாலையின் பத்தாவது ஆண்டு தின
நிகழ்வுகள் பாடசாலையின் ஸ்தாபகர் கிறிஸ்தோபர் ஸ்டப்ஸ் தலைமையில் இன்று காலை 10.00
மணியளவில் இடம்பெற்றது .
ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி மற்றும் பாடசாலை கொடி ஏற்றப்பட்டு தேசிய
கீதம் இசைக்கப்பட்டது . இதனை தொடர்ந்து பத்தாவது ஆண்டு தின நிகழ்வாக கேக் வெட்டும்
விசேட நிகழ்வுகள் இடம்பெற்றது .
இதனை தொடர்ந்து விசேட
தேவையுடைய மாணவர்களின் வரவேற்பு நிகழ்வுகளுடன் பாடசாலையின் பத்தாவது ஆண்டு நிறைவு
விழா சிறப்பிதழ் வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றது .
இந்நிகழ்வில் அதிதிகளாக
மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .கிரிதரன் , மட்டக்களப்பு மண்முனை
வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா , மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள்
உத்தியோகத்தர் எஸ் .அருள்மொழி , கிராம
சேவை உத்தியோகத்தர் எ .நேசதுரை , மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள்
உத்தியோகத்தர் மற்றும் பாடசாலை மாணவர்கள் , மாணவர்களை பெற்றோர்கள் கலந்துகொண்டனர்
.