(லியோன்)
மண்முனை வடக்கு பிரதேச செயலக
பிரிவிற்குட்பட்ட பாடசாலை மாணவர்க்கான
பாடசாலை கற்றல் உபகரணங்களும் , துவிச்சக்கர வண்டியும் மற்றும் சர்வதேச
புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் கூடுதலான நிதியினை
சேகரித்த வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பரிசில்கள்
வழங்கும் நிகழ்வு மண்முனை வடக்கு பிரதேச
செயலாளர் வி . தவராசா தலைமையில் பிரதேச
செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது .
வருடந்தோறும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு
தினத்தை முன்னிட்டு சமூகங்களிடையே நிதியை சேகரித்து அந்த நிதியின் ஊடாக சமூக
அபிவிருத்திக்கான வேலைத்திட்டங்களை மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்
மேற்கொள்ளப் பட்டு வருகின்றது .
அந்த வகையில்
பெறப்பட்ட நிதி மூலம் பாடசாலை மாணவர்களுக்கான சிசுதெரிய புலமைப்பரிசில்கள் ,
மருத்துவ உதவி , வீடுகள் திருத்துவதற்கான நிதி உதவி , சுயதொழிலுக்கான நிதி உதவி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான
கற்றல் உபகரணங்கள் வழங்கல் போன்ற பல்வேறு பட்ட வேலைத்திட்டங்களை சமூக
அபிவிருத்திக்காக செய்யப்படுகின்றன .
இதன்
ஒரு நிகழ்வாக மண்முனை வடக்கு பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி திணைக்களம் ஊடாக
மாணவர்க்கான பாடசாலை கற்றல் உபகரணங்களும்
, துவிச்சக்கர வண்டியும் மற்றும் சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினத்தில் கூடுதலான
நிதியினை சேகரித்த வாழ்வின் எழுச்சி முகாமையாளர்கள் , வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பரிசில்கள்
மற்றும்கௌரவிக்கும் நிகழ்வும்
இடம்பெற்றது .
வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி திணைக்களத்தினால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட
சிறுவர் கெகுழு போட்டியில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கும் பணப்பரிசில்களும் ,இந்நிகழ்வின் போது வழங்கி வைக்கப்பட்டது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி .எஸ்
.எம் . சார்ள்ஸ் மற்றும் பிரதேச செயலக
உதவி பிரதேச செயலாளர் எஸ் .யோகராஜா ,
பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் , பிரதே செயலக பிரதம கணக்காளர் ,
திவிநெகும திணைக்கள முகாமையாளர்கள் ,
வாழ்வின் எழுச்சி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர் .