ஊடகவியலாளர் பவிதரன் காலமானார்

தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழித் தேர்ச்சி உள்ளவரும், கலைஞரும் வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் ஊடகவியலாளருமான பிருதிவிராஜ் பவிதரன் வியாழக்கிழமை கண்டி வைத்தியசாலையில் காலமானார்.

1962 ஆம் ஆண்டு பிறந்த பவிதரன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் தேசிய சேவை, கொத்மலை ஒலிபரப்பு, ஊவா சமூக வானொலி, மற்றும் சர்வதேச ஊடக அபிவிருத்தி நிறுவனமான இன்ரநியூஸ் நெற்வேர்க்கின் கிழக்கு ஊடக இல்லம், மட்டக்களப்பு ஊடக இல்லம் என்பனவற்றில் வானொலி பெட்டக நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் இந்தியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் ஒலிபரப்புத் துறை பற்றியும் அச்சு இலத்திரனியல் மற்றும் சமூக ஊடகங்கள் பற்றியும் பயிற்சிகளைப் பெற்று ஆய்வுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

அன்னாரது இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பு கோட்டைக்கல்லாற்றில் வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது;.