மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட வழிபாடும்-நுழைவாயல் திறப்பு நிகழ்வும்

புதுவருடத்தில் அனைவருக்கும் நல்லாசிவேண்டி ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதம குரு ரங்க வரதராஜ குருக்களினால் இந்த விசேட பூஜைகள் நடாத்தப்பட்டன.

புதுவருடத்தில் அனைவருக்கும் சிறந்த வழியை காட்டவேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட ஆலய நூழைவாயில் இதன்போது திறந்துவைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து விசேட பூஜை நடைபெற்றதுடன் இந்த வழிபாட்டில் பெருமளவான அடியார்கள் கலந்துகொண்டனர்.