மட்டக்களப்பு மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி குழு கூட்டம்



(லியோன்)


மட்டக்களப்பு மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது .


மட்டக்களப்பு மாவட்டத்தின் 2016 ஆம் ஆண்டுக்கான புதிய  அபிவிருத்தி குழுவின்  திட்டங்களை செம்மையாக  செயல்படுத்துவதற்கான  மாவட்டத்தின் ஆரம்ப  கூட்டம்  மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் திருமதி . பி .எஸ் .எம் .சார்ள்ஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது .

இந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தில்  இணைக்கப்பட்டுள்ள  வேலைத்திட்டங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருகின்ற  உணவு உற்பத்தி   ,தேசிய போசாக்கு திட்டம் , பொருளாதாரம் அபிவிருத்தி  ,  போதை வஸ்து  ஒழிப்பதற்கான திட்டம்  மற்றும் கிட்னி பாதிப்புக்குள்ளானவர்களுக்கான வேலைத்திட்டம்   போன்ற வேலைத்திட்டங்களை செயல்படுத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட சகல அரசியல் கட்சிகளையும் ,அரச திணைக்கள அதிகாரிகளையும்  மற்றும்  அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகளை இணைத்துக்கொண்டதாக  ஒரு அரசியல் நிருவாக தேசிய வேலைத்திட்டங்களை நடைமுறை படுத்துவதற்கான அபிவிருத்தி குழு கூட்டம் இன்று இடம்பெற்றது  ,  

இன்று இடம்பெற்ற  மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில்  மீள்குடியேற்ற ராஜாங்க அமைச்சர் எம் .எல் .எ .எம் . ஹிஸ்புல்ல , .    கிராமிய  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம் .எஸ் .எஸ் .அமீர் அலி ,கிழக்கு மாகாண முதலமைச்சர்  நசிர் அகமட் ,கிழக்கு மாகாண அபிவிருத்தி குழு தலைவரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான ஞா , ஸ்ரீநேசன் , கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கே . துரைராசசிங்கம் , கிழக்குமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மற்றும் மட்டக்களப்பு  மாவட்ட அரச திணைக்கள அதிகாரிகள் ,மட்டக்களப்பு மாவட்ட  பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் ,  மாவட்ட பிரதேச செயலக பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட அரச சார்பற்ற நிறுவன அதிகாரிகள்  ஆகியோர்  கலந்துகொண்டனர் .