புனித மிக்கேல் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு சிரேஷ்ட மாணவர்களுக்கான முதலாம் தவணை 07ஆம் திகதி ஆரம்பமாகும்

(லியோன்)

மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியின் 2016 ஆம் ஆண்டு  சிரேஷ்ட மாணவர்களுக்கான முதலாம் தவணைக்கான  பாடசாலை வகுப்புகள் நாளை மறுதினம் 07ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாக உள்ளதாக கல்லூரி அதிபர் தெரிவிக்கின்றார் .
மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் 2015 ஆண் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் வினாத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறுவதனால் 2016 ஆம் ஆண்டு முதலாம் தவைனைக்கான  பாடசாலை சிரேஷ்ட மாணவர்களுக்கான வகுப்புக்கள் அதாவது தரம்  06 தொடக்கம் 13 ஆம் தரம் வரையான பாடசாலை மாணவர்களுக்கு 07ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாக உள்ளதாக அதிபர் தெரிவிக்கின்றார் .


அதேவேளையில் 2016 ஆம் ஆண்டு முதலாம் தவைனைக்கான  ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான முதலாம் வகுப்பு தொடக்கம் ஐந்தாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு முதலாம் தவணைக்கான வகுப்புகள் நாளை 06ஆம் திகதி புதன்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்லூரி அதிபர் ஆர் , பெஸ்லியோ வாஸ் தெரிவிக்கின்றார் .