பசுமை வேலைத்திட்டன் கீழ் மட்டக்களப்பு செலிங்கோ லைப் கிளை 04இல் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு

(லியோன்)


சிலிங்கோ லைப் நிறுவனம்  11 ஆம் திகதி முதல்  17ஆம் திகதி வரை பசுமை வாரமா பிரகடனப்படுத்தி  4000 ஆயிரம் மரக்கன்றுகளை நாட்டும் திட்டத்தினை நாடளாவிய ரீதியில் தமது கிளைகளின் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.


இதன் ஒரு நிகழ்வாக மட்டக்களப்பு செலிங்கோ  லைப் கிளை 04இல்  மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வுகள்  கிளையின் முகாமையாளர் எஸ் .வேணுகரன் தலைமையில் இடம்பெற்றது .

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிராந்திய அபிவிருத்தி முகாமையாளர் கே .சுமேந்திரன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார் . 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு ,களவாஞ்சிகுடி, சமாந்துரை ஆகிய செலிங்கோ  லைப் கிளை முகாமையாளர்களும் , நிறுவன உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர் .