சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம்

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தினால் மாகாண மட்டத்தில் நடாத்தப்பட்ட 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த சுகாதார சேவைகள் மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி ஆர்.ரவிச்சந்திரன் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவர் செங்கலடிப் பிரதேசத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாக நீண்ட காலம் கடமையாற்றி மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 இவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தம் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.