அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் ஒளிவிழா நிகழ்வு

(லியோன்)


கிறிஸ்து  பிறப்பு  விழாவை  முன்னிட்டு  மார்கழி  மாதத்தில்  விசேட நிகழ்வுகள்  இடம்பெற்று வருகின்றது .

இதன் ஒரு நிகழ்வாக ஒளிவிழா  கொண்டாட்டங்கள்  இடம்பெற்று  வரும்  வேளையில்  மட்டக்களப்பு  கல்வி வலயத்திற்குட்பட்ட  அமிர்தகழி    மெதடிஸ்த  பாலர் பாடசாலையின்  ஒளிவிழா  நிகழ்வு  இன்று  மாலை 03.00 மணியளவில்  அமிர்தகழி  சித்தி விநாயகர்  மகா வித்தியாலய  மண்டபத்தில்  நடைபெற்றது.

 ஒளிவிழா  நிகழ்வுக்கு   பிரதம  மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய உதவி கல்விப்பணிப்பாளர் எஸ் .கணேஷ் ( முன்பள்ளிமண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர்  .சுகுமாரன்  , அமிர்தகழி சித்திவிநாயகர்  மகா வித்தியாலய அதிபர்  திருமதி எஸ் . தர்மசீலன் , அமிர்தகழி மெதடிஸ்த  திருச்சபை  குரு  அருட் திரு டேவிட்  ராஜரட்ணம் மற்றும் ஆசிரியர்கள் ,சிறார்களின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .

  ஒளிவிழா  நிகழ்வில்  இப் பாடசாலை  சிறார்களின்  கலை நிகழ்வுகள்   இடம்பெற்றதோடு , இப்  பாலர் பாடசாலையில்  கல்வி கற்று  அடுத்த ஆண்டு  பாடசாலைக்கு  செல்லும்  மாணவர்களுக்கு   சான்றிதழ்கள் , மற்றும்  பதக்கங்கள்  அணிவிக்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டனர் .

இறுதி நிகழ்வாக   பிரதம  விருந்தினர்களின்  சிறப்பு  ஒளிவிழா உரைகளோடு , நத்தார்  தாத்தாவின்  ஆடல்,பாடல் மற்றும் பரிசுகள்  வழங்கப்பட்டு  ஒளிவிழா  இனிதாக  நிறைவு பெற்றது .