கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை அதிபர் திருமதி வா.யோகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.கங்கேஸ்வரன்,மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் ஏ.சுகுமாரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர மாணவர்கள் அதிகளவில் சித்தியடையும் பாடசாலைகளில் ஒன்றான் கோட்டைமுனை கனிஸ்ட வித்தியாலயத்தில் இந்த வருடமும் ஐந்தாம் தர பரீட்சiயில் சித்தியடைந்த 38 மாணவர்கள் கேடயங்கள் மற்றும் பதக்கம் அணிவிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அ;த்துடன் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 70 மாணவர்களும் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற 20 மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

இதேபோன்று பாடசாலைகளில் ஏனைய பாடத்துறை மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களும் ஏனைய துறைகளில் சாதனைகள் படைத்த மாணவர்களும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.