போரதீவுப்பற்றில் யானைகள் அட்டகாசம் -வயல் நிலங்களும் நாசம்

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட விவேகானந்தபுரத்தில் அமைந்துள்ள பால் குளிரூட்டும் நிலையத்திற்குள் ஞாயிற்றுக் கிழமை இரவு (13) புகுந்த பாட்டுயானைகள் பால் குளிரூமட்டும், நிலையத்தினை சேதப்படுத்தியுள்ளதுடன் வயல் நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளது.

மூன்று காட்டுயானைகளைக் கொண்ட கூட்டம் ஒன்று வந்துள்ளதாகவும், இதனால் பால் குளிரூட்டும் நிலையத்தைச் சுற்றி விதைத்திருந்த நெல்வயலும் சேதமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக பால் குளிரூட்டும் நிலையத்துக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும், பால் பால் குளிரூட்டும் நிலையத்தின் முகாமையாளர் எஸ்.எழில்வேந்தன் தெரிவித்தார்.

போரதீவுப்பற்று பிரதேசத்தில் மிக நீண்ட காலமாக காட்டுயானைகளின் அச்சுறுத்தல்களும், அட்டகாசங்களும், தொடர்ந்த வண்ணமுள்ளன.

இருந்த போதிலும் இந்த காட்டு யானைகளை விரட்டியடிக்க சம்மந்தப்பட்டவர்கள் தகுந்த திட்டத்தை இதுவரையில் முன்நெடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.