சர்வதேச ஊழில் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாநகரசபையில் நிகழ்வு

சர்வதேச ஊழல் ஒழிப்பு தினத்தினை முன்னிட்டு ஊழல் அற்ற மக்கள் சேவையை வழங்கும் என்னும் தலைப்பில் அரச அலுவலகங்களில் அரச அலுவலகர்கள் உறுதிமொழியளிக்கும் நிகழ்வு  இன்று புதன்கிழமை  நாடுபூராகவும் நடைபெற்றது.

அதனடிப்படையில் காலை 9.00மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச அலுவலகங்களிலும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழியளிக்கப்பட்டது.

இது தொடர்பான நிகழ்வு நேற்றையதினம் மட்டக்களப்பு மாநகர சபை முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வானது மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.

தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் பிரதி ஆணையாளர் என்.தனஞ்செயன் அவர்களினால் உறுதிமொழி வாசிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளரினால் ஊழல் எதிர்ப்பு தொடர்பான பிரதான உரை நிகழ்த்தப்பட்டது.