(லியோன்)
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை
பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும்
நிகழ்வும் “ வழித்துணை “ நூல் வெளியீடும் இன்று
இடம்பெற்றது .
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை
பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும்
நிகழ்வும் “ வழித்துணை “ நூல்
வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே
.பாஸ்கரன்
தலைமையில்
மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை
பிரதான மண்டபத்தில் இன்று
இடம்பெற்றது .
இந்நிகழ்வின் போது தொழில்சார் உளநல பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . அதனை தொடர்ந்து “
வழித்துணை “ நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக
மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ் .மனோகரன்
, கௌரவர அதிதியாக மட்டக்களப்பு யேசு சபை
மற்றும் தொழில்சார உளநல
நிலைய பணிப்பாளர் வணபிதா .போல் சற்குணநாயகம் , காத்தான்குடி உளநல வைத்திய
அதிகாரி வைத்தியர் திருமதி . எஸ் . பரமகுருநாதன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் எ .சுகுமாரன் , உடல்கல்வி உதவி கல்வி
பணிப்பாளர்
என் . லவக்குமார் மற்றும் வலயக்கல்வி அலுவலக
கல்வி அதிகாரிகள் , வலய
பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .