தொழில்சார் உளநல பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் “ வழித்துணை “ நூல் வெளியீடும்


(லியோன்)


மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வும் வழித்துணை நூல் வெளியீடும் இன்று இடம்பெற்றது


மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகமும் தொழில்சார் உளநல நிலையமும் இணைந்து நடாத்தும் ஆலோசனை பயிற்சி நெறிக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வும் வழித்துணை நூல் வெளியீட்டு நிகழ்வும் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே .பாஸ்கரன்  தலைமையில்  மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலை  பிரதான மண்டபத்தில் இன்று இடம்பெற்றது .  

இந்நிகழ்வின் போது  தொழில்சார் உளநல பயிற்சிகளை முடித்துக்கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது . அதனை தொடர்ந்து  வழித்துணை நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர்  எஸ் .மனோகரன் , கௌரவர அதிதியாக மட்டக்களப்பு  யேசு சபை மற்றும் தொழில்சார உளநல நிலைய பணிப்பாளர்  வணபிதா .போல் சற்குணநாயகம் , காத்தான்குடி உளநல வைத்திய அதிகாரி வைத்தியர்  திருமதி . எஸ் . பரமகுருநாதன் , மண்முனை வடக்கு கோட்டக்கல்வி பணிப்பாளர் .சுகுமாரன் , உடல்கல்வி உதவி கல்வி பணிப்பாளர்  என் . லவக்குமார்  மற்றும் வலயக்கல்வி அலுவலக கல்வி அதிகாரிகள் , வலய பாடசாலை அதிபர்கள் ,ஆசிரியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .