மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின் கைத்திறன் ஆக்கப் பொருட்களின் கண்காட்சி

(லியோன்)

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின்  முறைசாராக் கல்விப் பிரிவு நடாத்திய   கைத்திறன் ஆக்கப் பொருட்களின்   கண்காட்சி  இன்று இடம்பெற்றது.

முறைசாராக் கல்விப் பிரிவினால்   பாடசாலை கல்வியினை முடித்துக்கொண்ட  மாணவர்களின்   கைத்திறன் ஆக்கப் பொருட்களை காட்சிப்படுத்தும்  கண்காட்சி     மட்டக்களப்பு வலயக்கல்வி  அலுவலக முறை சாராக்கல்வி   உதவி கல்விப்பணிப்பாளர்  திருமதி  எஸ் . கிருபாகரன் தலைமையில் இன்று மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில்  மண்டபத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மட்டக்களப்பு வர்த்தக சங்க தலைவர் எம் . செல்வராசா கலந்துகொண்டு  கண்காட்சியினை திறந்து வைத்தார் 

மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலகத்தின்  முறைசாராக் கல்விப் பிரிவினால்   பாடசாலை கல்வியினை முடித்துக்கொண்ட  மாணவர்களுக்கு    கைத்திறன் ஆக்கப் பொருட்கள்  தொடர்பாக பயிற்சிகள் வழங்கப்பட்டு  இவர்களின்  தொழில் வாய்ப்பினை  மேம்படுத்தும்  நோக்கில்   அவர்களின்  கைத்திறன் ஆக்கப் பொருட்களை  இன்று இடம்பெற்ற  கண்காட்சி நிகழ்வில் காட்சிப்படுத்தியதோடு   கைத்திறன் ஆக்கப் பொருட்கள்  தொடர்பாக பயிற்சிகளை   முடித்துக்கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள்  வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது  .
           
இந்நிகழ்வில்   மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர்  கே . பாஸ்கரன்  மற்றும்  வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர்கள்ஆசிரியர்கள் ,மாணவர்கள்   மாணவர்களின் பெற்றோர் ஆகியோர் கலந்து கொண்டனர் .