(லியோன் )
மட்டக்களப்பு
மாவட்டத்தில் உள்ள இளைஞர்
யுவதிகளுக்கு
வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் மட்டக்களப்பு பெறேன்டினா தொழில் வாய்ப்பு நிலையத்தின் அனுசரணையில்
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்ப கல்லூரியில்
மாபெரும் தொழில் வாய்ப்பு சந்தை இன்று இடம்பெற்றது .
இந்நிகழ்வில்
பிரதம அதிதியாக மாவட்ட
மேலதிக
அரசாங்க அதிபர் எஸ் . கிரிதரன் கலந்துகொண்டார் .
தொடர்ந்து இந்நிகழ்வில் உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில் செய்யக் கூடிய உரிய வயதை அடைந்த
நிலையில் சுமார் ஒன்றரை
இலட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் காணப்படுகின்றார்கள் .
இவர்கள்
அனைவரும் தாய், தந்தை அல்லது
சகோதரர்களின் உழைப்பிலே தங்கி
வாழக் கூடியவர்களாக இருகின்றார்கள் .
இளைஞர் யுவதிகளின் உழைப்பினை இந்த நாட்டின் அபிவிருத்திக்காக செலவிடக்கூடிய
மட்டத்தில் இருகின்ற இந்த
இளைஞர் பரம்பரையின் ஊடாக அபிவிருத்தி செயல்பாடுகளை செய்து மிக விரைவான
ஒரு அபிவிருத்தியை
அடைய முடியாத நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் இருக்கிறது .
மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த
மட்டில்
தொழில் தகமை உடைய
மனித வளத்தின் பெறுபேறுகள் மிக குறைந்த நிலையில் காணப்படுகின்ற
மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது .
இதனால் தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள கூடிய தகமை
உள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக
இருப்பதன் காரணத்தால் எங்களுடைய பிரதேசத்தில் ஒரு
தொழிலை தொடங்கி நடாத்துவதற்கு முதலீடு செய்யக்கூடிய நிறுவனங்கள் இருந்த போதிலும் தொழிலை செய்வதற்கு வெளி
மாவட்டத்தில் இருந்து வரவேண்டிய நிலை கானப்படுகின்றது .
எனவே இந்த நிலை
மாறி
இளைஞர் யுவதிகள் தங்களின் தகமைகளுக்கு ஏற்றவகையில்
தங்களின்
தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொள்ள தொழில் கல்வியினை பெற்றுக்கொள்ள வேண்டும் என
தெரிவித்துக்கொண்டார் .
இன்று இடம்பெற்ற இந்த
தொழில் வாய்ப்பு சந்தையானது மட்டக்களப்பு தொழில் நுட்ப
கல்லூரியில் தொழில் பயிற்சியினை முடித்து கொண்டு வெளியேறும் மாணவர்களுக்கு உள்நாட்டு , வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளும் நோக்குடனும் இந்நிகழ்வு இடம்பெற்றது .
மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய்
தொழில் நுட்ப கல்லூரியில் இன்று இடன்பெற்ற மாபெரும்
தொழில் வாய்ப்பு சந்தையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளுக்கு தொழில்
வாய்ப்பினை
பெற்றுக்கொடுக்கும் முகமாக இலங்கையில் உள்ள தொழில்
நிறுவனங்களான
மட்டக்களப்பு தொழில் வாய்ப்பு மத்திய நிலையம் மற்றும் சனச , சீமா
,வேலண்டினா ,டெமோ ஆகியன நிறுவனங்களும் அதன்
முகாமையாளர்களும் கலந்துகொண்டனர்.