கல்லடி வலய சமுர்த்தி வங்கி பயனாளிகளுக்கும் வாழ்வாதார உதவி தொகை வழங்கும் நிகழ்வு

(லியோன்)


மட்டக்களப்பு மண்முனை  வடக்கு  பிரதேச செயலக  பிரிவுக்குட்பட்ட  கல்லடி   வலய  சமுர்த்தி  வங்கி  பயனாளிகளுக்கும்  உதவி தொகையும் , பாடசாலை  மாணவர்களுக்கு  துவிச்சக்கர வண்டிகளும்   வழங்கும்  நிகழ்வு  இன்று  இடம்பெற்றது  . 


2015  ஆம் ஆண்டு  புகைத்தல் தினத்தை முன்னிட்டு  சேமிக்கப்பட்ட  நிதியில்  கூடுதலான  நிதியினை சேகரித்து  மட்டக்களப்பு மாவட்டம் முதலிடத்தினை பெற்றுக்கொண்டது .

இதில்  பிரதேச செயலக மட்டத்தில் செங்கலடி பிரதேச செயலகம்  முதல் இடத்தினையும் , மண்முனை வடக்கு பிரதேச  செயலகம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது .  

இதன் ஊடாக  80 %  வீதம்  நிதியை  மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால்  கல்லடி  சமுர்த்தி  வலய  சமூக  அபிவிருத்தி மன்றத்திற்கு  வழங்கப்பட்டதை  தொடர்ந்து  பெற்றுக்கொண்ட  நிதியினை மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .தவராஜா   வழிகாட்டலுக்கு அமைவாக   கல்லடி  வலய  சமூக  அபிவிருத்தி மன்றத்தினால்   கல்லடி சமுர்த்தி   வங்கி முகாமையாளர்  கே . தங்கதுரை  தலைமையில்     சமுர்த்தி பயனாளிகளின்  குடும்பங்களில்  பாடசாலை செல்லும்  வறிய மாணவர்களுக்கு   துவிச்சக்கர வண்டிகளும் , சுயதொழில் ஈட்பட்டுள்ள சுயதொழில் முயற்சியாளர்களுக்கு  ஊக்குவிப்பு தொகையும்  , நோய் வாய்பட்டுள்ள  சமுர்த்தி  பயனாளிகளுக்கு  வாழ்வாதார உதவி தொகையும்   மற்றும்   சமுர்த்தி  வங்கி ஊடாக    புலமைப்பரிசில்  உதவி தொகை  பெறும் பாடசாலை மாணவர்களுக்கு  உதவி தொகைகள் வழங்கி வைக்கப்பட்டதுஇந்த நிகழ்வு இன்று  மட்டக்களப்பு    கல்லடி நொச்சிமுனை   பலநோக்கு  கட்டிட  மண்டபத்தில்  இடம்பெற்றது

இந்த நிகழ்வில்  பிரதம அதிதியாக  மண்முனை வடக்கு பிரதேச செயலக  திவிநெகும   திணைக்கள முகாமைத்துவ  பணிப்பாளர்  திருமதி கே . நிர்மலா . மண்முனை வடக்கு பிரதேச செயலக   சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் . டி . விஜெகுமார் , வலய உதவியாளர் . கே . கருணாநிதி  , கல்லடி  வலய  திவிநெகும   உத்தியோகத்தர்   டிஜெய யுனிட்டா  , திவிநெகும உத்தியோகத்தர்  . செல்வநாயகம்  மற்றும்  கல்லடி சமுர்த்தி வலய   சமுர்த்தி சங்கங்களில்  பயனாளிகளும் , மாணவர்களும் கலந்துகொண்டனர்,