குருக்கள்மடத்தில் மணிகண்டப்பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

சபரிமலை ஐயப்ப சுவாமி விரதம் அனுஸ்டிப்போரின் மணிகண்டப்பெருவிழா மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

ஐயப்ப சுவாமி ஹரிகரசுத மணிகண்டன் மண்டல பெருவிழா இன்று வெள்ளிக் கிழமை (18) மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்திற்குட்பட்ட குருக்கள்மடம் ஐயனார் ஆலயத்தில் நடைபெற்றது.

இதன்போது மாலை அணிந்த ஐயப்ப சுவாமிகள்  மற்றும், இலங்கையின் நாலாபாகமும் இருந்து வந்த பல நூற்றுக் கணக்கான பக்தர்களும், கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில்  18 படிப்பூஜைகள் இடம்பெற்று, தேவார பாராயணம், பஜனை வழிபாடுகள், சமய சொற்பொழிவுகளும், இடம்பெற்று அன்னதானமும் நடைபெற்றது.

இதன்போது மாத்தளை சுதுகங்கை ஹரிகரசுத மணிகண்டன் சன்னிதான சபரிமலை குருஜீ சிவ.ஸ்ரீ.ரவீந்திரக்குருக்களும், குருவின் குரு திருகோணமலை சாம்பல்தீவு ஈழ புரீஸ்வரர் சிவ.ஸ்ரீ.ரமேஸ் குருக்கள் ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றன.