கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு

(அனா)

கிறிஸ்து பிறப்பு விழாவை முன்னிட்டு கோறளைப்பற்று பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு நேற்று (18.12.2015) மாலை இடம் பெற்றது.


இந் நிகழ்வில் வாழைச்சேனை பரி யோவான் ஆலய கறோல் குழுவின் பாடல்கள் இடம் பெற்றதுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச பாடசாலை மாணவர்களது கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றதுடன் பிரதேச செயலக பிரிவில் உள்ள வறிய மாணவர்கள் எழுபத்தைந்து பேருக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற ஒளி விழா நிகழ்வில் பிரதேச வாழைச்சேனை பரி யோவான் ஆலய அருட்தந்தை பி. தயாலன், கோறளைப்பற்று உலக தரிசன நிறுவனத்தின் முகாமையாளர் ஈ.ரணில் பிரதேச செயலக உயர் அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.