‘நான் நிரபராதி. கிறிஸ்தவ மக்களிடம் தெரிவியுங்கள்’ என ஊடகவியலாளர்களிடம் பிள்ளையான் வேண்டுகோள்

நான் நிரபராதி.இதனை மட்டக்களப்பு கிறிஸ்தவ மக்களுக்கு தெரிவியுங்கள் என ஊடகவியலாளர்களிடம் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று காலை கொழும்பில் இருந்து குற்றப்புலனாய்வுத்துறையினரால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட சந்திரகாந்தன்,சிறைச்சாலைக்கு கொண்டுசெல்லுவதற்காக பஸ்சில் ஏற்றும்போதே இதனைத்தெரிவித்தார்.

எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தனி சிறைக்கூடம் வழங்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சட்டத்தரணி நீதிவானிடம் கோரியதற்கு இனங்க பிரத்தியேக சிறைக்கூடம் வழங்குமாறு நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா பணித்துள்ளார்.