சர்வமத ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல்

(லியோன்)

மட்டக்களப்பு சர்வமத ஒன்றியத்தின் சமய நல்லிணக்கத்திற்கான வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு சால்ஸ் மண்டபத்தில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு எகெட் கரிதாஸ் நிறுவன அனுசரனையில் இயக்குனர் அருட்பணி ஜிரேன் டீலிமா தலைமையில்  இடம்பெற்ற  சர்வமத ஒன்றியத்தின் சமய நல்லினக்கத்திற்கான வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக கிழக்கு பல்கலைகழக விரிவுரையாளர் அருட்பணி நவரெட்ணம் நவாஜி கலந்துகொண்டார்.

இன்று இடம்பெற்ற மட்டக்களப்பு  சர்வமத ஒன்றியத்தின் சமய நல்லினக்கத்திற்கான வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற சமய மற்றும் சமூக நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு  மண்முனை வடக்கு , கல்லடி , காத்தான்குடி ஏறாவூர் , செங்கலடி ஆகிய பிரதேச சர்வமத ஒன்றிய தலைவர்கள்,செயலாளர்கள் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அத்துடன் 2016ஆம் ஆண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.